நமது அஞ்சல் OBC ன் தமிழ் மாநில துணை தலைவர் திரு V S ராம்மோகன் அவர்கள் 23.04.2017 அன்று காலமானார். அஞ்சல் OBC உருவாவதற்கு திரு ராம்மோகன் ஓர் உந்து சக்தியாக திகழ்ந்தார். சென்னை மத்திய கோட்டத்தில் அஞ்சல் OBC உருவாக வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தபோது தான் முன்னின்று முக்கியமானவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். பொது வாழ்க்கையில் தான் என்றும் மற்றவர்களுக்கு உதவும் நற்குணம் கொண்டவர். அவரை நாம் எந்த நேரத்தில தொடர்பு கொண்டாலும் முகம் கோணாமல் இன்முகத்துடன் என்றும் உதவும் நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர். கடலூரில் நடைப்பெற்ற முதலாவது மாநாட்டிற்கு தனது சொந்த செலவில் வாகனம் ஏற்ப்பாடு செய்து சென்னையிலிருந்து பெருவாரியான உடன்பிறப்புகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வைத்ததை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன் . நமது அஞ்சல் OBC ன் வளர்ச்சியில் ஓர் முக்கிய பங்கு வகித்தவர். அவரது இழப்பு அவரது குடும்பத்தார் மட்டுமின்றி அஞ்சல் OBCகே ஒரு பேரிழப்பாகும் . அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
No comments:
Post a Comment