தமிழக அஞ்சல் OBC துணை தலைவரும், OBC பேரமைப்பின் துணை தலைவருமான திரு A J புருஷோத்தமன் அவர்கள் கடந்த 03.09.2018 அன்று காலமானதை அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக தெரிவித்திருந்தோம். அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவரும், தனது போராட்ட குணத்தின் காரணமாக நிர்வாகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகவும் திகழ்ந்தவர். சங்க நிகழ்ச்சிகளை மிகவும் பிரமாண்டமாய் ஏற்பாடு செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். திரு புருஷோத்தமனின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி நமது OBC பிரிவினருக்கே ஓர் மாபெரும் இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரதிப்போமாக.
அன்னாரது புகழஞ்சலி கூட்டம் சென்னை GPO வளாகத்தில் 18.09.2018 அன்று மாலை நடைப்பெற உள்ளது. OBC சங்க செயல்வீரர்கள் அனைவரும் தவாறது கலந்துக்க கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக அஞ்சல் OBC