தபால்காரர்களுக்கான தேர்வில் முறைகேடு. நீதி விசாரணை கோரி தமிழக சட்ட பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் மத்திய அமைச்சருக்கு கடிதம்.
Postman / Mailguard -Direct Recuritment தேர்வில் ஹரியானா மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்றது குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தி தமிழக மாணவர்களுக்கு உரிய நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தொலைத் தொடர்பு துறையின் இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹாவுக்கு தமிழக சட்டமன்ற எதிர்கட்சிதலைவரும் திராவிடமுன்னேற்ற கழகத்தின் செயல்தலைவருமான திரு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.