OBC பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு கணேஷ் சிங் அவர்கள் சென்னையில் OBC பேரமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியது தினமலர் பத்திரிகை செய்தியாக வெளியாகியுள்ளது. அதன் நகல் இங்கு நமது உறுப்பினர் பார்வைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை, ''என்.சி.பி.சி., எனப்படும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில உரிமைகளை பறிக்காது,'' என, தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான, பார்லி., குழு தலைவர் கணேஷ்சிங் எம்.பி., கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அரசியல் சட்ட அங்கீகாரம் அளிக்கும், 123வது சட்டத்திருத்தம் குறித்த விளக்கக்கூட்டம், சென்னை யில் நேற்று நடந்தது. இதில், தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான, பார்லி., குழு தலைவர் கணேஷ்சிங் பேசியதாவது:
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, எம்.பி.,க்கள், மார்ச்சில், பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். ஆணையத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள், 'ஆள் இல்லை' என்ற காரணத்தை கூறி, நிராகரிப்பதை ஆதாரங்களுடன் கூறினர்.
இதையடுத்து, இரு நாட்களில், ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும், 123வதுஅரசியல் சட்டத்திருத்தம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், ஜாதிகளை சேர்ப்பது, நீக்குவது குறித்து, ஆணையமே முடிவு செய்யும்; ஆணையம், ஒருபோதும் மாநில உரிமைகளை பறிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை, ''என்.சி.பி.சி., எனப்படும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில உரிமைகளை பறிக்காது,'' என, தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான, பார்லி., குழு தலைவர் கணேஷ்சிங் எம்.பி., கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அரசியல் சட்ட அங்கீகாரம் அளிக்கும், 123வது சட்டத்திருத்தம் குறித்த விளக்கக்கூட்டம், சென்னை யில் நேற்று நடந்தது. இதில், தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான, பார்லி., குழு தலைவர் கணேஷ்சிங் பேசியதாவது:
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, எம்.பி.,க்கள், மார்ச்சில், பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். ஆணையத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள், 'ஆள் இல்லை' என்ற காரணத்தை கூறி, நிராகரிப்பதை ஆதாரங்களுடன் கூறினர்.
இதையடுத்து, இரு நாட்களில், ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும், 123வதுஅரசியல் சட்டத்திருத்தம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், ஜாதிகளை சேர்ப்பது, நீக்குவது குறித்து, ஆணையமே முடிவு செய்யும்; ஆணையம், ஒருபோதும் மாநில உரிமைகளை பறிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment