தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் 123 வது சட்ட திருத்த மசோதா 02.08.2018 அன்று மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. 15 நாட்களுக்குள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.
இது OBC பிரிவினருக்கும் அதன் நலனுக்காக பாடுபட்ட பல நல இயக்கங்களின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இது நமது சமுதாய பணிக்கு கிடைத்திருக்கும் மற்றுமோர் அங்கீகாரமாகும்.
இந்த வெற்றிக்கு அரும்பாடு பட்ட OBC பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு கணேஷ் சிங், NCOBC கௌரவ தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் NCBC உறுப்பினருமான மாண்புமிகு S K கார்வேந்தன், மாபொதுச்செயலாளர் திரு K தனசேகர் மற்றும் NCOBC யில் அங்கம் வகிக்கும் அணைத்து உறுப்பு சங்கங்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநில செயலாளர்
அஞ்சல் OBC
No comments:
Post a Comment