நமது தேசீய இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நல சங்கங்களின் கௌரவ தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசீய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் உறுப்பினருமான மாண்புமிகு முனைவர் S K கார்வேந்தன் அவர்கள் எழுதிய "சமூக நீதி" என்ற நூல் வெளியீட்டு விழா 08.12.2017 அன்று ஷங்கர் I A S அகாடமி அரங்கில் நடைப்பெற்றது. இந்த நூலை முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு கே. வெங்கடபதி அவர்கள் வெளியிட ஷங்கர் I A S அகாடமி நிறுவனரும் இயக்குநருமான திரு தே ஷங்கர் அவர்கள் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் திரு M அண்ணாதுரை, திரு J பார்த்தசாரதி, திரு J K புதியவன், திரு K தனசேகரன், திரு C சேதுபதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் திரு S K கார்வேந்தன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த நூல் சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றத்திற்க்காக அரும்பாடு பட்டவர்கள், OBC யினரின் இன்றைய நிலை, இட ஒதுக்கீட்டின் தற்போதைய நிலை, அதை அமல்படுவதில் உள்ள சிக்கல்கள், பல்வேறு புள்ளி விபரங்கள் என பல முக்கிய செய்திகளை தன்னுள்ளே கொண்டுள்ளது.
இந்த நூலின் அணைத்து பிரதிகளும் விழா அரங்கிலேயே விற்பனை ஆகியது பாராட்டுக்குரியது.
இந்த விழாவில் அஞ்சல் OBC ன் தமிழ் மாநில நிர்வாகிகள் திரு D S ஹரிகிருஷ்ணன், திரு J புருஷோத்தமன், திரு K கஜேந்திரன், திரு M ரவி, திரு K குமார், திருமதி விஜயலக்ஷ்மி மற்றும் சங்க முன்னோடிகள் கலந்துக்க கொண்டனர்.
No comments:
Post a Comment