பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிப்பு
நமது பிற்படுத்தபட்டோர் ஊழியர் நல சங்கத்தின் சார்பாக நாம் எடுத்த முயற்சியின் காரணமாக பொங்கல் பண்டிகை (14.01.2017) அன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நமது சங்கம் இந்த பிரச்சினையை பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு திரு டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கவிஞர் கனிமொழி ஆகியோர் கவனத்திற்கும் எடுத்துச் சென்றோம். இதனிடையே நமது பேரமைப்பின் பொது செயலாளர் திரு கே. தனசேகரன் அவர்கள் இதனை மாநில எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு மு க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் திரு சீமான் ஆகியோர் கவனத்திற்கும் எடுத்து சென்றார். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு போராட்டத்தினை அறிவித்ததன் விளைவாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு பொங்கல் பண்டிகை அன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட நமது பேரமைப்பிற்கு நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநில செயலர்
No comments:
Post a Comment