OBC பிரிவினரின் நீண்ட நெடுங்கால கோரிக்கையான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்த விவாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 06.02.2018 அன்று மாநிலங்களைவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் கூடுதல் பலத்துடன் செயல்படும் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இது OBC இனத்தவரின் வாழ்வில் ஓர் பொன்னாள். இதற்காக அரும்பாடுபட்ட OBC பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு கணேஷ் சிங்க், வாழும் V P சிங்க் ஐயா S K கார்வேந்தன், K தனசேகர் மற்றும் NCOBC உறுப்பு சங்க செயல்வீரர்களுக்கும் அஞ்சல் OBC தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
மாநில செயலாளர்
அஞ்சல் OBC
No comments:
Post a Comment