நமது அஞ்சல் OBC ன் மேற்கு மண்டல செயலரும், மாநில சங்கத்தின் துணை தலைவரும், சேலம் கிழக்கு கோட்டத்தின் செயலாளருமான திரு P ஜோதிமணி அவர்கள் கடந்த 30.12.2017 அன்று பணி ஓய்வு பெற்றார்.
சேலம் ஜோதிமணி அவர்கள் நமது அஞ்சல் OBC சங்கத்தில் தன்னை இணைத்தது முதல் நமது சங்கம் வலுப்பெற பல முயற்சிகளை மேற்கொண்டவர். சேலம் கிழக்கு கோட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்ததுடன் ஆத்தூர், தர்மபுரி ஆகிய கோட்டங்கள் உருவாக காரணமானவர். சங்கத்தின் அணைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பங்கு பெற்றவர். அவரது பணி ஒய்வு காலம் மிகவும் சிறப்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஆரோகியத்துடனும் அமைந்திட மாநில அஞ்சல் OBC தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment