OBC ஊழியர் நல சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் கொண்ட குழு உயர்திரு S K கார்வேந்தன் அவர்கள் தலைமையில் 26.12.2017 முதல் 30.12.2017 வரை புது டெல்லி சென்று OBC பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் என பலரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மாபொதுச்செயலர் திரு K தனசேகரன், அஞ்சல் OBC பொதுச்செயலர் திரு D S ஹரிகிருஷ்ணன், வருமானவரி துறை தலைவர் திருமதி G குணவதி, G I C செயலாளர் திரு மகேஷ்குமார், மற்றும் G I C தலைவர் திரு கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
OBC பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு திரு கணேஷ் சிங் அவர்களை 26.12.2017 காலை அவரது இல்லத்தில் சந்தித்து OBC சார்ந்த பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண வலியுறுத்தினோம்.
மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் மாண்புமிகு அனுப்ரியா படேல் அவர்களை 26.12.2017 அன்று அவரது அலுவகத்தில் சந்தித்து C G H S திட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மனு அளித்தோம்.
26.12.2017 அன்று மாலை 3 மணியளவில் அஞ்சல் துறை தலைவர் திரு அனந்த் நாராயண் நந்தா அவர்களை சந்தித்து அஞ்சல் OBC சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து கோரிக்கை வைத்தோம்.
26.12.2017 அன்று மாலை மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து மத்தியஅரசு, பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசு ஆகியவற்றில் பணிபுரியும் OBC ஊழியர்கள் பிரச்சினைகளும், அதற்க்கு தீர்வு காண வலியுறுத்தினோம்.
27.12.2017 அன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருச்சி சிவா அவர்களை சந்தித்து அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் 2006ம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த பிராந்திய அடிப்படையில் பணியிடங்களை நிரப்புதல் குறித்து கலந்தாலோசித்து இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தினோம். பிராந்திய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படாத காரணத்தால் தமிழகத்தை சார்ந்தோர்க்கு அரசுப்பணி கிடைக்கப்பெறாமல் வடகத்தியர் அணைத்து பணியிடங்களை ஆக்கிரமிப்பு செய்வதை எடுத்துரைத்தோம்.
இந்த விவாதத்தின்போது திருச்சி சிவா அவர்கள் நமக்கு மிகவும் அருமையான சிற்றுண்டி ஏற்பாடு செய்து மகிழ்வித்தார். இந்த சந்திப்பின்போது திரு கார்வேந்தன் அவர்கள் தான் எழுதிய "சமூக நீதி" என்ற புத்தகத்தை மாண்புமிகு திருச்சி சிவாவிற்கு அன்பளிப்பாக அளித்தார்.
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் இல. கணேசன் அவர்களை சந்தித்து தமிழக இளைஞர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினோம்.
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு மனோஜ் குமார் சின்ஹா அவர்களை சந்தித்து அஞ்சல் துறையில் GDS ஊழியர் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தினோம். பாராளுமன்றம் செல்லும் அவரசத்தில் இருந்த அவர் நமது மனுவை பெற்றுக்கொண்டு இது குறித்து தன்னிடம் கலந்தோசிக்க தனது காரியதரிசிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
GIC நிர்வாகத்தின் ஊழியர் நல அதிகாரி திரு ஸ்ரீனிவாச ராவ் அவர்களை சந்தித்து GIC OBC ஊழியர் நல சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவதில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
வடக்கு ரயில்வே பொதுச்செயலர் திரு வாசுதேவ் யாதவ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். வட மாநிலங்களில் அஞ்சல் OBC துவங்க வேண்டுமென்ற நமது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு நல்கிடுவதாக வாக்களித்தார்
மத்திய நிதி துறை IAS அதிகாரி திரு செல்வகுமார், நிதி அமைச்சர் சந்திப்பு ஆகிய செய்திகளும், புகைப்படங்களும் பின்னர் பதிவு செய்யப் படும்.
பொது செயலாளர்
அஞ்சல் OBC