Saturday, 30 December 2017

OBC Delegates in New Delhi


OBC  ஊழியர் நல சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் கொண்ட குழு உயர்திரு S  K  கார்வேந்தன் அவர்கள் தலைமையில் 26.12.2017 முதல் 30.12.2017 வரை புது டெல்லி சென்று OBC  பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் என பலரை சந்தித்தனர்.  இந்த சந்திப்பின்போது மாபொதுச்செயலர் திரு K  தனசேகரன், அஞ்சல் OBC  பொதுச்செயலர் திரு D  S  ஹரிகிருஷ்ணன், வருமானவரி துறை தலைவர் திருமதி G  குணவதி, G  I  C  செயலாளர் திரு மகேஷ்குமார், மற்றும் G  I  C  தலைவர் திரு கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.




OBC பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு திரு கணேஷ் சிங் அவர்களை 26.12.2017 காலை அவரது இல்லத்தில் சந்தித்து OBC  சார்ந்த பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண வலியுறுத்தினோம்.


மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் மாண்புமிகு அனுப்ரியா படேல் அவர்களை 26.12.2017 அன்று அவரது அலுவகத்தில் சந்தித்து C  G  H  S  திட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மனு அளித்தோம்.


26.12.2017 அன்று மாலை 3 மணியளவில் அஞ்சல் துறை தலைவர் திரு அனந்த்  நாராயண் நந்தா  அவர்களை சந்தித்து அஞ்சல்  OBC  சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து கோரிக்கை வைத்தோம்.


26.12.2017 அன்று மாலை  மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்  ராதாகிருஷ்ணன்  அவர்களை சந்தித்து மத்தியஅரசு, பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசு ஆகியவற்றில் பணிபுரியும் OBC  ஊழியர்கள் பிரச்சினைகளும், அதற்க்கு தீர்வு காண வலியுறுத்தினோம்.



27.12.2017 அன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திருச்சி சிவா அவர்களை சந்தித்து அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் 2006ம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த பிராந்திய அடிப்படையில் பணியிடங்களை நிரப்புதல் குறித்து கலந்தாலோசித்து இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தினோம்.  பிராந்திய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படாத காரணத்தால் தமிழகத்தை சார்ந்தோர்க்கு அரசுப்பணி கிடைக்கப்பெறாமல் வடகத்தியர் அணைத்து பணியிடங்களை ஆக்கிரமிப்பு செய்வதை எடுத்துரைத்தோம்.  

இந்த விவாதத்தின்போது திருச்சி சிவா அவர்கள் நமக்கு மிகவும் அருமையான சிற்றுண்டி ஏற்பாடு செய்து மகிழ்வித்தார்.  இந்த சந்திப்பின்போது திரு கார்வேந்தன் அவர்கள் தான் எழுதிய "சமூக நீதி" என்ற புத்தகத்தை மாண்புமிகு திருச்சி சிவாவிற்கு அன்பளிப்பாக அளித்தார்.



மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் இல. கணேசன்  அவர்களை சந்தித்து தமிழக இளைஞர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தினோம்.



மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு மனோஜ் குமார் சின்ஹா அவர்களை சந்தித்து அஞ்சல் துறையில்  GDS ஊழியர் பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தினோம்.  பாராளுமன்றம் செல்லும் அவரசத்தில் இருந்த அவர் நமது மனுவை பெற்றுக்கொண்டு இது குறித்து தன்னிடம் கலந்தோசிக்க தனது காரியதரிசிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

  
GIC  நிர்வாகத்தின் ஊழியர் நல அதிகாரி திரு ஸ்ரீனிவாச ராவ் அவர்களை சந்தித்து GIC OBC  ஊழியர் நல சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவதில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினோம்.  இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.


வடக்கு  ரயில்வே பொதுச்செயலர் திரு வாசுதேவ் யாதவ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.  வட மாநிலங்களில் அஞ்சல் OBC  துவங்க வேண்டுமென்ற  நமது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு நல்கிடுவதாக வாக்களித்தார் 

மத்திய நிதி துறை IAS  அதிகாரி திரு செல்வகுமார், நிதி அமைச்சர் சந்திப்பு ஆகிய செய்திகளும், புகைப்படங்களும் பின்னர் பதிவு செய்யப் படும்.

பொது செயலாளர் 
அஞ்சல் OBC 


Monday, 25 December 2017

Salem Jothimani Retires on 30.12.2017

நமது அஞ்சல் OBC ன் மேற்கு மண்டல செயலாளரும், சேலம் கிழக்கு கோட்ட சங்கத்தின் செயலாளருமான திரு P  ஜோதிமணி அவர்கள் 30.12.2017 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.  திரு ஜோதிமணி அவர்கள் தான் சார்ந்த இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல் பட்டவர்.  அஞ்சல் OBC  நடத்திய போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தவாறது கலந்துக் கொண்டவர்.  மாநில சங்கத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு சரியான ஆலோசனைகள் வழங்கி வழி நடத்தியவர்.  மேலும் மேற்கு மண்டலத்தில் நமது சங்கம் வலுப்பெற கிளைகளை துவங்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

அவரது பணிஓய்வு பாராட்டு விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிரே உள்ள சந்தாஸ்ரமம் அரங்கில் 31.12.2017 அன்று நடைப்பெற உள்ளது.  அஞ்சல் OBC  உடன்பிறப்புகள் அனைவரும் தவாறது கலந்துக்கொண்டு வாழ்த்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

மாநில செயலாளர்



Friday, 8 December 2017

"Social Justice" by Sri S K Kharventhan - Book Release function


நமது தேசீய இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நல சங்கங்களின் கௌரவ தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசீய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் உறுப்பினருமான மாண்புமிகு முனைவர் S  K  கார்வேந்தன் அவர்கள் எழுதிய "சமூக நீதி" என்ற நூல் வெளியீட்டு விழா 08.12.2017 அன்று ஷங்கர் I  A  S  அகாடமி  அரங்கில் நடைப்பெற்றது.  இந்த நூலை முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு கே. வெங்கடபதி அவர்கள் வெளியிட ஷங்கர் I  A  S  அகாடமி நிறுவனரும் இயக்குநருமான திரு தே ஷங்கர் அவர்கள் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார்.  இந்த விழாவில் திரு M  அண்ணாதுரை, திரு J  பார்த்தசாரதி, திரு J  K  புதியவன், திரு K தனசேகரன், திரு C  சேதுபதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.  பின்னர் திரு S  K  கார்வேந்தன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்த நூல் சமுதாயத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றத்திற்க்காக அரும்பாடு பட்டவர்கள், OBC யினரின் இன்றைய நிலை, இட ஒதுக்கீட்டின்  தற்போதைய நிலை, அதை அமல்படுவதில் உள்ள சிக்கல்கள், பல்வேறு புள்ளி விபரங்கள் என பல முக்கிய செய்திகளை தன்னுள்ளே  கொண்டுள்ளது.

இந்த நூலின் அணைத்து பிரதிகளும் விழா அரங்கிலேயே விற்பனை ஆகியது பாராட்டுக்குரியது.

இந்த விழாவில் அஞ்சல் OBC ன் தமிழ் மாநில நிர்வாகிகள் திரு D S ஹரிகிருஷ்ணன், திரு J  புருஷோத்தமன், திரு K  கஜேந்திரன், திரு M  ரவி, திரு K  குமார், திருமதி விஜயலக்ஷ்மி மற்றும் சங்க முன்னோடிகள் கலந்துக்க கொண்டனர்.







Monday, 4 December 2017

Social Justice by DR S K Kharventhan - Book Release


நமது OBC  சம்மேளனத்தின் கௌரவ தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தேசீய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினருமான முனைவர் S K  கார்வேந்தன் அவர்கள் எழுதிய " சமூக நீதி" நூல் வெளியீட்டு விழா 08.12.2017 அன்று மாலை 05.45 மணியளவில் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள சங்கர் IAS  அகாதமி அரங்கில் நடைப்பெற உள்ளது.  நமது அஞ்சல் OBC உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்க கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.



ரூபாய் 200 விலையுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவின்போது ரூ. 100 க்கு 
 கிடைக்கும்.

ஹரிகிருஷ்ணன்
மாநில செயலாளர்