OBC நலன் காக்க பாராளுமன்ற மக்களவையில் 123 வது சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளதை அனைவரும் அறிவீர். இந்த சட்ட திருத்த மசோதா மாநிலங்களைவையில் நிறைவேற்றப் படாத காரணத்தால் பாராளுமன்றம் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு தேர்வு குழுவை அமைத்துள்ளது. இந்த தேர்வுக்கு குழு மீண்டும் பாராளுமன்றம் கூடுகையில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப் பட்டுள்ளது.
இந்த நிலையில் நமது OBC பேரமைப்பின் கௌரவ தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் உறுப்பினருமான ஐயா S K கார்வேந்தன் அவர்கள் இந்த OBC பாராளுமன்ற தேர்வு குழுவின் முன்னிலையில் தனது சாட்சியத்தை 16.05.2017 அன்று அளித்துள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்து பாராளுமன்றம் கூடுகையில் OBC க்கள் தங்களது வாழ்வில் நல்லதொரு விடியலை எதிர்நோக்கி உள்ளனர்.
ஐயா S K கார்வேந்தன் அவர்களுக்கு அஞ்சல் OBC தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.