Sunday, 30 April 2017

Anant Narayan Nanda now Secretary, Department of Posts


திரு ஆனந்த் நாராயண் நந்தா அவர்கள் புதிதாக நமது அஞ்சல் துறையின் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.  நமது அஞ்சல் OBC அவரை வாழ்த்தி வரவேற்கிறது.



May Day Greetings

அனைவருக்கும் இதயங்கனிந்த 

மே தின நாள் வாழ்த்துக்கள்.


News in Dinamalar Daily on Sri Ganesh Singh speech

OBC பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு கணேஷ் சிங் அவர்கள் சென்னையில் OBC பேரமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியது தினமலர் பத்திரிகை செய்தியாக வெளியாகியுள்ளது. அதன் நகல் இங்கு நமது உறுப்பினர் பார்வைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை, ''என்.சி.பி.சி., எனப்படும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில உரிமைகளை பறிக்காது,'' என, தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான, பார்லி., குழு தலைவர் கணேஷ்சிங் எம்.பி., கூறினார். 
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அரசியல் சட்ட அங்கீகாரம் அளிக்கும், 123வது சட்டத்திருத்தம் குறித்த விளக்கக்கூட்டம், சென்னை யில் நேற்று நடந்தது. இதில், தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான, பார்லி., குழு தலைவர் கணேஷ்சிங் பேசியதாவது:
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, எம்.பி.,க்கள், மார்ச்சில், பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர். ஆணையத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள், 'ஆள் இல்லை' என்ற காரணத்தை கூறி, நிராகரிப்பதை ஆதாரங்களுடன் கூறினர்.
இதையடுத்து, இரு நாட்களில், ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும், 123வதுஅரசியல் சட்டத்திருத்தம், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், ஜாதிகளை சேர்ப்பது, நீக்குவது குறித்து, ஆணையமே முடிவு செய்யும்; ஆணையம், ஒருபோதும் மாநில உரிமைகளை பறிக்காது. 
இவ்வாறு அவர் பேசினார்.

Friday, 28 April 2017

Sri Ganesh Singh and MP's on Amendment 123 of 2017

இன்று OBC பாராளுமன்றக்குழு தலைவர் மாண்புமிகு கணேஷ் சிங், திரு T K S இளங்கோவன், திருமதி விஜிலா சத்யநாத், திரு S K கார்வேந்தன், Dr  E  முரளீதரன், திரு J K புதியவன் மற்றும் OBC நலன் காக்கும் முன்னோடிகள் தேசீய இதர பிற்படுத்டப் பட்டோர் ஊழியர் நல சங்கம் ஏற்பாடு செய்த மா பெரும் கூட்டத்தில் கலந்துக்க கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  இந்த கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தும் 123 கொண்டு வந்த பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.  இந்த மசோதா நிறைவேற முயற்சி மேற்கொண்டு அரும்பாடுபட்ட திரு கணேஷ் சிங், திரு S K கார்வேந்தன், மற்றும் OBC பாராளுமன்ற குழுவிற்கும் நன்றி தெரிவிக்கப் பட்டது.  

அஞ்சல் OBC சார்பில் சென்னை மத்திய கோட்டம், சென்னை GPO, ஆத்தூர், சென்னை MMS, ஆகிய கோட்டங்களை சேர்ந்த முன்னோடிகள் கலந்துக் கொண்டனர் .  

Today the 28.04.2017 Sri Ganesh Singh, Honorable Chairman, OBC Parliamentary Committee, Sri T K S Elangovan, Smt Vijila Sathyanath, Sri S K Kharvendhan, Dr E Muraleedharan, Sri J K Pudhiyan and stalwars and wellwishers of OBC spoke on Amendment 123 in a meeting conducted by National Confederation of OBC Employees in Chennai.  They explained the salient features of the Amendment.  
































Wednesday, 26 April 2017

GDS officiated as Postman, Mailguard, MTS to get higher pay.

ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளின்படி  தபால்காரர், மெயில்கார்டு மற்றும் MTS  ஆக பனி புரிந்த கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் நிலுவை தொகையுடன் வழங்கிட அஞ்சல் வாரியம் ஆணை பிறப்பித்துள்ளது.


Tuesday, 25 April 2017

OBC Parliamentary Committee Chairman Visits Chennai


The OBC Parliamentary Committee Chairman Sri Ganesh Singh MP visits Chennai on 28.03.2017 at Hotel Ambassador Pallava.  All the OBC brothers make it convenient to attend the meeting and benifit from the speech.


Monday, 24 April 2017

TN Circle Vice President Sri V S Rammohan expired

நமது அஞ்சல் OBC ன் தமிழ் மாநில துணை தலைவர் திரு V S  ராம்மோகன் அவர்கள்  23.04.2017 அன்று காலமானார்.  அஞ்சல் OBC  உருவாவதற்கு திரு ராம்மோகன் ஓர் உந்து சக்தியாக திகழ்ந்தார்.  சென்னை மத்திய கோட்டத்தில் அஞ்சல் OBC  உருவாக வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தபோது தான் முன்னின்று முக்கியமானவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.  பொது வாழ்க்கையில் தான் என்றும் மற்றவர்களுக்கு உதவும் நற்குணம் கொண்டவர்.  அவரை நாம் எந்த நேரத்தில தொடர்பு கொண்டாலும் முகம் கோணாமல் இன்முகத்துடன் என்றும் உதவும் நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர்.    கடலூரில் நடைப்பெற்ற முதலாவது மாநாட்டிற்கு தனது சொந்த செலவில் வாகனம் ஏற்ப்பாடு செய்து சென்னையிலிருந்து பெருவாரியான உடன்பிறப்புகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வைத்ததை இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன் .  நமது அஞ்சல் OBC ன் வளர்ச்சியில் ஓர் முக்கிய பங்கு வகித்தவர்.  அவரது இழப்பு அவரது குடும்பத்தார் மட்டுமின்றி அஞ்சல் OBCகே ஒரு பேரிழப்பாகும் .  அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

Sunday, 23 April 2017

Sri V S Rammohan, Vice President, OBC EWA India Post Expired

நமது தமிழ் மாநில அஞ்சல் O  B C ன் துணை தலைவரும், கோபாலபுரம் அஞ்சலகத்தில் தபால்காரருமான திரு V  S  இராம்மோகன் அவர்கள் 23.04.2017 அன்று காலமானார் என்பதை ஆழந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அஞ்சல் OBC


Friday, 21 April 2017

Speech on Amendment 123 of 2017 by Sri S K Kharvendhan

இன்று (21.04.2017) வருமானவரி துறை வளாக அரங்கில் மாண்புமிகு எஸ் கே கார்வேந்தன் அவர்கள் சட்ட திருத்தம் 123 குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.  ஓ பி சி பிரிவினருக்கு கொடுக்கப்படும் சலுகைகள், ஒதுக்கீடு ஆகியவை குறித்த நீண்ட வரலாறு துவங்கி இன்று பாராளுமன்றத்தில் ஓ பி சி ஆணையத்திற்க்கு வழங்கப்பட உள்ள சட்ட அங்கீகாரம் குறித்தும், அதன் காரணமாக ஓ பி சி பிரிவினர் அடையவுள்ள பயன்கள் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார்.  

வருமானவரி துறை ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் ஓ பி சி பேரமைப்பின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் பெருவாரியாக கலந்துக்க கொண்டு பயன் பெற்றனர்.  அஞ்சல் ஓ பி சி சார்பில் மாநில சங்க நிர்வாகிகள்  டி எஸ் ஹரிகிருஷ்ணன், கே கஜேந்திரன், ஜே புருஷோத்தமன், என் ராதாகிருஷ்ணன், மற்றும் சென்னை மத்திய கோட்ட சங்க முன்னோடிகள் கே கணேஷ், டி எம் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.












Wednesday, 19 April 2017

Honorable S K Kharvendhan speaks on amendment to Article 123

மாண்புமிகு எஸ் கே கார்வேந்தன் அவர்கள் 123ல் சட்ட திருத்தும் கொண்டு வந்தது குறித்து வருமானவரித்துறை அரங்கில் 21.04.2017 மதியம் 1.45 மணியளவில் உரை நிகழ்த்த உள்ளார்.  அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

அஞ்சல் ஓபிசி 
தமிழ் மாநிலம் 



Sunday, 16 April 2017

Delayed Salary - entitled for interest

அரசு ஊழியர்ககளுக்கு சம்பள தொகையை தாமதமாக வழங்கினால் அவர்கள் உண்டான வட்டி பெற தகுதியானவர்களே என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



Saturday, 15 April 2017

Vivadha Medai 15.07.2017


சன் டிவி யில் 15.04.2017 அன்று ஓபிசி குறித்த விவாத மேடை நிகழ்ச்சி நடைப்பெற்றது.  இதில் திரு கார்வேந்தன், திரு முரளிதரன், திரு குமரேசன், திரு விஜயன் , திரு தமிழ் தாசன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதனை பார்க்காதவர்கள் இந்த நிகழ்ச்சியை இணைதளத்தில் காணலாம். 

A order based on an important judgement by Supreme Court

திரு சிவகுமார் அவர்கள் தான் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று  அஞ்சல் உதவியாளராக பதவி உயர்வு பெற்றதை காரணம் காட்டி அவருக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய MACP  மறுக்கப் பட்டது.  இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அவருக்கு கீழ் நீதிமன்றங்களில்  நியாயமான தீர்ப்பு கிடைக்கப் பெறாத காரணத்தால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊழியர்  தரப்பு நியாயங்களை கருத்தில் கொண்டு அவருக்கு MACP  வழங்க உத்தரவிட்டது.  உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவருக்கு MACP வழங்க அஞ்சல் நிர்வாகத்தால் உத்தரவிட்ட நகர் கீழே  பார்வைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.